கௌரவ சபாநாயகர் கரு ஜெயசூரிய, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் கௌரவ அமைச்சர் தயா கமகே, கௌரவ இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சுமந்திரன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (03.01.2019) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.